கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் செயலியில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் ஆன்லைனில் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் உள்ளிட்ட ஆறு பேரின் வங்கி கணக்கிற்கு ராகுல் 23 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து ராகுல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.