தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குலமங்கலம் ஜவுளி தெருவில் கைலாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமனின் நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்ததாக தெரிகிறது. இதனால் ஜெயராமனுக்கும், கைலாசத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெயராமன் கைலாசத்தை தாக்கினார்.

இதில் மயங்கி விழுந்த கைலாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கைலாசம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.