திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏக வள்ளியம்மன் கோவில் தெருவில் பெயிண்டரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரியார் நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொந்தரவால் அவதிப்பட்ட கணேஷ் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தாமல் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டு உரிமையாளர் கணேஷிடம் வாடகை பணத்தை கேட்டதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குழந்தையை நன்றாக பார்த்துக் கொள் என கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த கணேஷின் மாமனார் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மருமகன் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.