வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் அஜித் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.