கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 48 வயதுடைய நம்பர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆண்கள் மட்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்தார். அந்த செயலி மூலம் செரையான்பாளையத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் அறிமுகம் ஆனார். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் நாம் நேரில் சந்தித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம் என ஆசை வார்த்தைகள் கூறி அந்த மேலாளரை தான் கூறிய இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து வாலிபர் தன்னுடன் வந்த 4 கூட்டாளிகளுடன் இணைந்து மேலாளரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கூகுள் பே மூலம் வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே காயமடைந்த மேலாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.