கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கொங்கு நகரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லஷிகா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் தனது கணவரிடம் குழந்தையை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிவெட்டி வருமாறு கூறினார்.

அதற்கு கார்த்திகேயன் பழனி கோவிலுக்கு சென்று மொட்டை போட வேண்டி இருக்கிறது. எனவே முடி வெட்ட வேண்டாம் என கூறினார். இதனால் லஷிகாவே தனது குழந்தைக்கு முடி வெட்டி விட்டதாக தெரிகிறது. இதனை பார்த்த கார்த்திகேயன் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த லஷிகா தனது இரண்டு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டார்.

இதுகுறித்து தனது கணவரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு லஷிகா கூறியுள்ளார். இதனால் கார்த்திகேயன் விரைந்து வந்து தனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இரண்டு பேரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.