சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையிள் பூமாதேவி என்பவர் வசித்து வருகிறார்m இவரது பக்கத்து வீட்டில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசியின் மருமகளான தண்டையார்பேட்டையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் அடிக்கடி தனது மாமியாரை பார்ப்பதற்காக புது வண்ணாரப்பேட்டைக்கு சென்று வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பூமாதேவியுடன் சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 20-ஆம் தேதி பூமாதேவி தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது 10 பவுன் தங்க நகை மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்படாமல் இருந்த நிலையில் நகை எப்படி திருது போனது என்று தெரியவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சுப்புலட்சுமி பூமாதேவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் ஏற்கனவே திருடி வைத்திருந்த மாற்று சாவியை பயன்படுத்தி நகையை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.