சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில் பன்னாட்டு புறப்பாடு முனையம் அருகே விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் செல்லும் நுழைவு வாயில் கண்ணாடி கதவின் ஒரு பகுதி திடீரென உடைந்தது. ஆனால் கண்ணாடி சிதறல்கள் கீழே விழாமல் அப்படியே நொறுக்கியபடி இருந்தது.

அந்த சத்தம் கேட்டதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரி, உணவக ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். தற்போது கண்ணாடி நொறுங்கிய நிலையில் இருக்கும் கதவு அகற்றப்படாமல் அப்படியே இருப்பதால் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.