தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மருது பாண்டியரின் குருபூஜை விழா வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதியும், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அக்டோபர் முப்பதாம் தேதியும் தொடர்ந்து வருவதால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முன் அனுமதி இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் எதுவும் நுழைவதற்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் மாவட்டத்திற்குள் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக அக்டோபர் 28 முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.