காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1  மணி நேர போராட்டத்திற்கு பிறகு பள்ளியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஷூ, புத்தகங்கள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.