திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணசமுத்திரம் கிராமத்தில் மீன் வியாபாரியான தனஞ்செயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்களை விற்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிவகிரி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு தனஞ்செயன் பின்னால் ஏறிக்கொண்டார்.

அவர்கள் ஏரிக்கடை வழியே செல்லும் போது சிவகிரி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனஞ்செயனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனஞ்செயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.