தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உத்தம்தானி கல்லூர் சாலையில் இருக்கும் வாடகை வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து துவரங்குறிச்சி சேர்ந்த தட்சிணாமூர்த்தி, ரஞ்சித் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் வாடகை வீட்டில் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தட்சிணாமூர்த்தி, ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சொகுசு கார், இரண்டு ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.