SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி,   இன்றைக்கு வருகிற தேர்தலுக்காக எடப்பாடி அவர்களை மேடையில் வைத்து எஸ்டிபிஐ கட்சி இன்றைக்கு அழகு பார்க்கவில்லை. அதிமுகவினுடைய அந்த வளர்ச்சியில் தொடர்ச்சியான அக்கறை கொண்ட ஒரு மாபெரும் பேரியக்கம் எஸ்டிபிஐ கட்சி என்பதனை நான் இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

2022 இல் மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவுற்ற அன்றைய தினத்திலிருந்து அதிமுகவிற்கு பிரச்சினை வந்த அந்த காலகட்டத்தில் எல்லாம் ஒவ்வொரு காலகட்டங்களிலும், எஸ்டிபிஐ கட்சியினுடைய தலைமை தங்களுடைய அறிக்கைகளின் மூலமாக தங்களுடையபேச்சுக்களின்  மூலமாக,  அதிமுக வலிமை பெற வேண்டும்.

அதிமுக பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைக்கக்கூடாது.. அதிமுகவை அவர்கள் அழித்துவிடுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும், தமிழகத்தினுடைய மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இங்கே அதிமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும். அதிமுக வீரியத்தோடு இருக்க வேண்டும். அதிமுக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு நேரத்திலும், அதிமுகவினுடைய தலைவர்களுடைய கவனத்திற்கும் பொதுமக்களினுடைய கவனத்திற்கும் கொண்டு சென்ற மகத்தான பேரியக்கம் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.