மதுரையில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி மார்க்கெட் ஒப்பந்த மோதல் காரணமாக ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம் தேதி தனது வீட்டு வாயிலில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருமுருகன் கொலை வழக்கில் அவரது சித்தப்பாவின் மகனும், அதிமுக வட்டச் செயலாளரான தவக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் தவக்குமார் மனைவி சோனியா காந்தி, மருமகன் ராஜா உறவினர்கள் பிரகாஷ், அழகு ராஜா, வெங்கடேசன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.