தமிழகத்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுப்பதற்காக பேருந்துகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்க படிக்கட்டுகளில் முன்பும் பின்பும் ஜன்னல்களில் நிரந்தரமாக கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்படும் என்றும் விரைவில் இந்த நடைமுறை அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.