சமூக வலைதளங்களில் தற்போது ஒரு லோக்கல் ரயில் வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், நீல நிற உடை அணிந்த பெண் ஒருவர், மற்றொரு பயணியின் பையில் இருந்து செல்போனை எடுப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அருகில் இருந்த பயணி ஒருவர் பதிவு செய்ததாக கூறப்படும் இந்த வீடியோ, கூட்டமான இடங்களில் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் இந்த காட்சி லோக்கல் ரயிலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரயிலில் வழக்கம்போல் ஏராளமான பெண்கள் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த கூட்டத்தில் நீல நிற உடை அணிந்த பெண் ஒருவர், அடிக்கடி சுற்றி பார்த்தபடி இருப்பது வீடியோவில் தெரிகிறது. அவர் சரியான நேரத்துக்காக காத்திருப்பது போல அவரது செயல்பாடுகள் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த பெண் அருகில் நின்றிருந்த மற்றொரு பயணியின் பையை மெதுவாக திறந்து அதிலிருந்த செல்போனை எடுத்ததாக வீடியோவில் பதிவாகியுள்ளது. மிகவும் கவனமாகவும் வேகமாகவும் இந்த செயல் நடந்ததால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அருகில் இருந்தவரின் கேமராவில் முழு சம்பவமும் பதிவாகியுள்ளது.

பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். லோக்கல் ரயில், பேருந்து, மெட்ரோ போன்ற கூட்டமான இடங்களில் பயணம் செய்யும்போது செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில், வீடியோவில் உள்ள சம்பவத்தின் முழுமையான உண்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.