கடலூர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகிற 25-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகு அவர்கள் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9443000849 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.