தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி புறவழிச்சாலைகள் தனியாருக்கு சொந்தமான துணிக்கடை அமைந்துள்ளது. கடந்த 16- ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தர்மபுரியை சேர்ந்த மோகன் குமார், பரத் குமார் ஆகிய இருவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 13 லட்சத்து 93 ஆயிரத்து 790 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.