கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் வசிக்கும் உறவினரான பெரியசாமிக்கும் வெங்கடேசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடேசன் அம்மா குளம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பெரியசாமி திடீரென தகராறு செய்து அரிவாளால் வெங்கடேஷின் தலையில் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வெங்கடேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.