வருமான வரித் துறையை வச்சி பாஜக அரசாங்கம் எதிர்க் கட்சிகளை மிரட்டுது, நாங்க அச்சப்பட மாட்டோம் என்று முதலமைச்சர் சொன்னது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அது உண்மை தான்.

நீங்க பாரதிய ஜனதா ஆளுகிற மாநிலங்களில் எதிர்க்கட்சியை சோதனை செய்வது, ஆளாத மாநிலங்களில் ஆளுங்கட்சியை சோதனை செய்வது…  இப்ப என்னன்னு நீங்களே பாருங்க.

இப்ப திமுக அமைச்சர்களை குறி வச்சு இந்த சோதனையை செய்யறீங்க. அப்ப நீங்க கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில்  எந்த தவறும் நடக்கலைன்னு நீங்க ஒத்துக்கொள்கிறீர்களா? இப்போ நீங்க இவ்வளவு காலம் கழித்து ரெண்டு மாசத்துல தேர்தல் வரப்போகுது….

ஜனவரியில் நீங்க அறிவிக்க போறீங்க…  இப்ப ஏன் சோதிக்கிறீங்க ? இப்போ ஐயா ஜெகத்ரட்சகனை எடுத்துக்கிட்டா….  திடீர்னு நேத்து பணக்காராவில்லை. ஐயா ஏவா வேலு அப்ப இருந்தே இருக்காரு. நீங்க தேர்தல் வரும் போது இத சொல்லும் போது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை… அதுல நேர்மையும் இல்லை,  ஒன்னும் இல்ல. அதனால முதல்வர் சொன்னதும் சரிதான். அத வச்சு அச்சுறுத்தி பார்ப்பது உண்மை தான் என தெரிவித்தார்.