தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என வீடு வீடாகச் சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.