சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சரக்கு வாகனம் மோதி காங்., மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் உயிரிழந்தார். சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தாம்பரம் அருகே சாலையோர கடையில் சாப்பிட்டபோது வாகனம் மோதியதில் நாகராஜன் உயிரிழந்தார். இவர் இந்த முறை எம்பி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.