நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கி வரும் மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை அளித்ததையடுத்து, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர், காஞ்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால். அம்மாவட்டங்களிலும் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது