தமிழ்நாடு வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவின்படி தொழில்நுட்ப ஆலோசகர் சிவகுமார் ஆய்வு செய்வதற்காக நாகைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நாகை வட்டாரம் பொரவாச்சேரி, குற்றம்பொருந்தானிருப்பு போன்ற கிராமங்களில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் பற்றி விதைசான்று மற்றும் அங்கக சான்று துறையின் விதை வல்லுனரால் பயிற்சி அளிக்க வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விதை கிராம திட்ட கூறுகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் செயல்படுத்துதல் பற்றி தொழில்நுட்ப ஆலோசகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம்.. தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி…!!!!
Related Posts
Breaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read moreஎனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…
Read more