மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.