விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரத்தில் வசிக்கும் சிலர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த 75 பேர் சுமார் 9 கோடி ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பணம் கொடுத்தவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்காமல் 8 மாதங்களாக ஏமாற்றி வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.