திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என 7 1/2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை பறித்த ராஜன் என்பவரை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தீமிதி விழாவுல செம சீன்…! திருடனுக்கே ஷாக் கொடுத்த பூசாரி மனைவி … சாமியாடியதால் தூக்குன இடத்துலேயே சிக்கிய 10 சவரன்…!
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
Read more“உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்வ?”… பழ வியாபாரியின் வக்கிரம்.. கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்..!!
ஈரோடு அருகே உள்ள சோலார் நகரைச் சேர்ந்தவர் சேட்டு தனபால், இவர் தனது மனைவி புஷ்பாவுடன் இணைந்து தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், தனது தந்தை ஆறுமுகத்திற்கும், மனைவி புஷ்பாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகச்…
Read more