திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என 7 1/2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை பறித்த ராஜன் என்பவரை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…
Read more“இவங்க பண்றதுதான் சுத்த தற்குறி வேலை!” மேயர் பிரியாவை வெளுத்து வாங்கிய தவெக எம்.எல்.ஏ பல்லவி.. குத்துவிளக்கு மோதலின் க்ளைமாக்ஸ்..!!
“சென்னையில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய குத்துவிளக்கு சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ பல்லவி மேயர் பிரியாவிற்கு எதிராக நிகழ்ந்ததை விளக்கியுள்ளார். மேயர் பிரியாவின் புரோட்டோகால் விளக்கத்திற்கு…
Read more