தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்து புதுக்கோட்டையில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்து திருக்கானூர் அருகே வல்லம்- ஒரத்தநாடு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் திருச்சி நோக்கி பார்சல் லாரியும் வந்தது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் லாரி சாலையில் கவிழ்ந்து பார்சல்கள் சிதறியது.

மேலும் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது. இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் வினோத், கண்டக்டர், கார்த்திகேயன், 5 பயணிகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்