திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் கன்னியாகுமரி அழகப்பபுரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி(42) என்பவர் அடைக்கப்பட்டார். இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் பத்தாம் தேதி உச்சமாகாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை பெற்று அவர் சிறையில் இருந்தார். கடந்த 27-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட உச்சி மாகாளியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உச்சிமாகாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.