கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவியானந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ரத்தினவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை கண்டித்தனர். இதனையடுத்து ரத்தினவேல் தான் சேமித்து வைத்திருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த ரத்தினவேலுவின் மனைவி அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரத்தினவேல் குடிபோதையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தினவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.