ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையிள் ஈடுபட்டனர். அப்போது தனியார் மற்றும் அரசு பேருந்து என மொத்தம் 25 பேருந்துகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் 13 பேருந்துகளில் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஏர் ஹரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தி இருந்தால் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.