கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள் குமாரி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இந்நிலையில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி இந்த முகாமிற்கு தலைமை தாங்கியுள்ளார். பின்னர் தளவாபாளையம் கால்நடை மருத்துவர் கோபிநாத் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் 1500-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டனர்.