ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி கருக்கம்பாளையத்தில் கோவில் பூசாரியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கிருத்திகாவிற்கு குறைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டது. நேற்று அதிகாலை கிருத்திகா தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்தார்.

இதனையடுத்து அசைவில்லாமல் கிடந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.