கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருது கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த மாதம் 16-ஆம் தேதி டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மர்ம நபர்கள் பத்து பாக்ஸ் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பேளகொண்ட பள்ளியில் வசிக்கும் வினோத், பிரபு ஆகியோர் டாஸ்மாக் கடையில் துளையிட்டு மது பாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.