கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டீக்கடை அருகே நின்று சில வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த அன்பு செல்வன், பெரம்பலூரை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.

அவர்கள் விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.