கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மாற்று குடியிருப்பில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியராஜ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியராக இருக்கிறார். பாக்யராஜுக்கு சுசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. சம்பவம் நடைபெற்ற அன்று பாக்யராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாக்யராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சுசித்ரா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து பாக்யராஜ் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததற்கு சுசித்ரா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் பாக்கியராஜ் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.