கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவரப்பூரில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரங்கநாதன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் கிளிஞ்சமேடு டாஸ்மாக் கடை அருகே சென்ற போது திடீரென மழை பெய்ததால் அங்குள்ள ஹோட்டல் கட்டிடம் அருகே ஒதுங்கி நின்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஹோட்டல் கட்டிட சுவர் இடிந்து ரங்கநாதன் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த ரங்கநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கநாதன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.