கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் விடுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயக்குமார், மணிகண்டன், அன்சாரி, தேவா, குணா செல்வம், காஜா மொய்தீன், பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஏழு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 16,500 ரூபாய் பணம், சீட்டு கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.