தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சமூக நீதித்துறைக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, துறை சார்ந்த அமைச்சர் வன்னி அரசு பல்வேறு முக்கிய மற்றும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். சமூக நலம் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு உதவும் வகையில் புதியதாக ‘அகம்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் முதற்கட்டமாக 2,500 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் தங்கும் சமூக நீதி விடுதிகளைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்காக, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காகக் கூடுதலாக ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்விக்கு இடையூறு இல்லாத பாதுகாப்பான சூழலை உருவாக்க, ரூ.160 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 150 புதிய சமூக நீதி விடுதிக் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டமன்றத்தில், மாண்புமிகு சமூக நிதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள்,
* மானிய கோரிக்கையின் போது அகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2500 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
* சமூக நீதி விடுதி பராமரிப்புத்தொகை உயர்த்தப்படும்.
* வருடாந்திர பராமரிப்பு தொகை… pic.twitter.com/qE22OimlsH— Office of Social Justice Minister (@OffVanniArasu) August 27, 2026
“>
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்விச் சூழலை உயர்த்தவும் தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
