இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் டிரைவர்களுக்கு ஏசி அறை ஏற்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலையில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இதனை அமல்படுத்த இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.