சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி சமீபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு நலனுக்காக சபரிமலையில் முதியோர் மற்றும் குழந்தைகள் தனி வரிசையில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே சமயம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.