செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளரான புகழேந்தி, நான்  சொல்லிட்டே இருக்கேன். எல்லா இடத்திலும் சொல்கிறேன். இது என்ன பண்ணுகிறார்கள் என்றால்,  மீடியாவுக்கு சொல்லி… ஏதோ ஏடிஎம்கே-க்கு அவர் தான் சொந்தக்காரர் மாதிரியும்,  அவர்தான் பொதுச்செயலாளர் மாதிரியும்  பொய்யா பேசிக் கொண்டிருக்கிறார். மக்களவையில் ரவீந்திரநாத் MP, தமிழ்நாட்டு சட்டசபையில் ஒருங்கிணைப்பாளர்,  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் அப்புறம் பார்த்தீர்கள் என்றால்,  அருமைக்குரிய மிஸ்டர் ஐயப்பன் நாங்கள் அங்கு இருக்கிறோம்.

ஆகவே இந்த இரண்டு இடத்திலும் எலக்சன் கமிஷனோ, யாருமே முடிவு பண்ணல. அப்பப்ப கோட்டு ஜட்ஜ்மெண்ட் வாங்கி….  அந்த கோட்டு ஜட்ஜ்மென்ட் வைத்துக்கொண்டு ஏமாற்றி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு கூட ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்….  பொதுச்செயலாளர் சம்பந்தமாக வழக்கு போனது பார்த்தீர்கள்…. தொடர்ந்து பத்து வழக்குக்கு மேல பெண்டிங் இருக்கிறது. டிசைட் பண்ண முடியாது.

ஆனால் இவர் என்ன பண்ணுகிறார் என்றால்,  இவரை  பொதுச் செயலாளர் அப்படின்னு இவரே சொல்லிக்கிட்டு… இவர் தான் அதிமுக என்று சொல்லி,  என்னிடம் சின்னம் இருக்கிறது என்று சொல்லி, எல்லாத்தையும்  ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ரொம்ப வேதனையாக விஷயம்….

மீடியாவையும் ஏமாற்றி இருக்கிற ஒரே பெரிய மனிதன் பழனிச்சாமி தான். இதை மீடியாக்கு எவ்வளவோ டீடைலா சொல்லி விட்டேன்,  கேட்கவில்லை….  எலக்சன் கமிஷனில் இது மாதிரி  கொடுத்து பிராட் வேலையை பண்ணி இருக்கிறார் பழனிச்சாமி. அவர் சொல்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. எலக்சன் கமிஷன் தான் சொல்ல வேண்டும்.

2017க்கு பின்னாடி எலக்சன் கமிஷன் சொல்லவில்லை. இப்போ என்ன நடக்குது ?  ஓபிஎஸ் அணி அப்படின்னு எங்களை போடுவது, அவர்களை அதிமுக  என்று போடுவது…  என்ன அடிப்படையில் போடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆகவே கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்துள்ளோம் ஆகவே பழனிசாமி ஏமாற்றுகின்ற்றார் என பேசினார்.