இன்றைய காலகட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒருசில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பம்பட்டியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற பிளஸ் 1 மாணவனை, சகமாணவன் ஒருவன் சாதி பெயரை சொல்லி அடித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான விஷ்ணு, பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான மாணவனை, ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.