சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கன்னியப்ப கிராமணி தெருவில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டின் அருகே பால்ராஜ் என்பவரின் கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காவலாளியாக வேலை பார்க்கும் மகேந்திரன் (35) என்பவர் அந்த சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.