தேனி மாவட்டத்தில் உள்ள குள்ள புரம் கிராமத்தில் தனியார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தீபக் சந்திரன் என்பவர் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிணற்றில் தீபக்சந்திரன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மகனின் உடலை வாங்க மறுத்து தீபக் சந்திரனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீபக் சந்திரனின் பிறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.