தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்பதற்கு போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இரவு பகல் பார்க்காமல் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல கிராமங்களில் வெள்ளம் வடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டது. அந்த கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு மற்றும் பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்குகின்றனர்.