விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு வெட்டும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.