தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே நடந்த ஆவண கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி என்ற 20 வயது பெண் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பெற்றோர் விவசாய வேலைக்கு சென்ற போது பார்கவி தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

அதே நேரத்தில் வீட்டுக்கு வந்த பெண்ணின் தாய் பார்கவியின் நடத்தையை ஜீரணிக்க முடியாமல் கோபத்தில் பார்கவியை தாக்கி சேலையால் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.