தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி உயர்கல்வி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பிப்ரவரி 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் முன்கூட்டியே பணம் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் அப்படி வழங்கப்படாது எனவும் பிப்ரவரி 15ஆம் தேதி தான் பணம் வழங்கப்படும் எனவும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.