தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. வரவு செலவு கணக்கு மற்றும் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 100 நாள் வேலை திட்டம் மற்றும் பள்ளி கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதில் உள்ளூர் மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.